டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியிலும், சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியிலும் ஏதாவது ஒன்றில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மூன்று முறை ஓசூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றி உள்ளேன். கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ,ஹிந்தி, தமிழ் என பல மொழிகள் பேசுகிற மக்கள் அதிகமாக உள்ள இடங்கள் ஓசூர் மற்றும் அண்ணா நகர் .
அண்ணாநகரில் வியாபாரரீதியாக பல வருடங்கள் வசித்து வந்தேன். அண்ணாநகரில் தேர்தல் பணியாற்றியுள்ளேன். அதனால் அந்த இரு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். டிடிவி தினகரன் எங்கு நின்றாலும் அவரை தலைமை அனுமதியோடு எதிர்த்துப் போட்டியிட தயார். டிடிவி தினகரன் ஆர்கேநகர் வாக்காளர்களை ஏமாற்றியுள்ளார். தொகுதி பக்கமே போவதில்லை. ஆகவே ஆயிரகணக்கான வாக்காளர்கள் அவர் எங்கு நின்றாலும் அவரை தோற்கடிக்க என்னோடு களம் காண்பார்கள்” என்றார்.

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்
பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத
தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக
பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த
