டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியிலும், சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியிலும் ஏதாவது ஒன்றில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மூன்று முறை ஓசூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றி உள்ளேன். கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ,ஹிந்தி, தமிழ் என பல மொழிகள் பேசுகிற மக்கள் அதிகமாக உள்ள இடங்கள் ஓசூர் மற்றும் அண்ணா நகர் .
அண்ணாநகரில் வியாபாரரீதியாக பல வருடங்கள் வசித்து வந்தேன். அண்ணாநகரில் தேர்தல் பணியாற்றியுள்ளேன். அதனால் அந்த இரு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். டிடிவி தினகரன் எங்கு நின்றாலும் அவரை தலைமை அனுமதியோடு எதிர்த்துப் போட்டியிட தயார். டிடிவி தினகரன் ஆர்கேநகர் வாக்காளர்களை ஏமாற்றியுள்ளார். தொகுதி பக்கமே போவதில்லை. ஆகவே ஆயிரகணக்கான வாக்காளர்கள் அவர் எங்கு நின்றாலும் அவரை தோற்கடிக்க என்னோடு களம் காண்பார்கள்” என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது
கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்
வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சத
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற
இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரி
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை
அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்
வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த
