More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டிப்பு
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டிப்பு
Mar 03
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டிப்பு

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில், இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. அதற்கு பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி, இந்தியா நேற்று பதில் அளித்தது.



இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதன்மை செயலாளர் பவன்குமார் பதே, மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசியதாவது:-



இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்ளும் நோக்கத்தில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை பாகிஸ்தான் திட்டமிட்டு தவறாக பயன்படுத்தி வருகிறது. மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் பாகிஸ்தான், இந்த கவுன்சிலின் நேரத்தை வீணடிக்கக்கூடாது.



அரசு ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், சிறுபான்மையினரின் மனித உரிமைகளை நசுக்குவதையும் நிறுத்துமாறு பாகிஸ்தானை இந்த கவுன்சில் வற்புறுத்த வேண்டும்.



ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட எத்தனையோ பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறது. அரசு நிதியில் இருந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருவதையும் இந்த கவுன்சில் அறியும். பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் ஆகியிருப்பதாக அந்நாட்டு தலைவர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர்.



மனித உரிமை மீறலின் மோசமான வடிவம்தான் பயங்கரவாதம். சுதந்திரம் பெற்றதற்கு பிறகு, இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது எப்படி என்று பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்க வேண்டும்.



பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக பேசுபவர்கள் தன்னிச்சையாக சிறைவைக்கப்படுகிறார்கள், காணாமல் போகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். இந்த அராஜகங்களில் ஈடுபடும் பாதுகாப்பு படையினர், எந்த தண்டனையும் இன்றி தப்பி விடுகிறார்கள்.



இவ்வாறு அவர் பேசினாா்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹ

Jun12

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைச

Apr19

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ

Mar19

தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி

May09

ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ

Jun14

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி

May04

உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்ச

May27

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல

Jan31

அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ம

Aug16

போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்

Apr11

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ

Feb28

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Jan06

சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல்

Mar30

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான ப

Mar05

உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 20 (17:29 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 20 (17:29 pm )
Testing centres