இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், பீகாரில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது:
பீகார் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனையிலும் இதனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வசதியை மாநில மாநில அரசே ஏற்பாடு செய்து தரும்.
60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் தானாக முன் வந்து முறைப்படி பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்
கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர
பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன
மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப
சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட
