கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெல் ஏற்றி சென்ற பாரஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். இதன்போது யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பாரஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் மோதிய பாரஊர்தி, பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், சாரதி சாதாரண காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு
