More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார்வி சாரணைகளுக்காக அழைப்பு!
 முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார்வி சாரணைகளுக்காக அழைப்பு!
Feb 16
முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார்வி சாரணைகளுக்காக அழைப்பு!

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.



இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள மனோ, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறினேன் என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ், எனது காவலர் மூலமாக எனக்கு அறிவித்துள்ளது.



தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரெழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.



இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.



இருந்தபோதிலும் கடந்த 3ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகிய போராட்டம் பல்வேறு தடைகளின் பின்னர், கடந்த 7ஆம் திகதி பொலிகண்டியைச் சென்றடைந்தது.



 சட்டத்தை மீறி பேரணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகளுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி

Jan28

வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்

Oct24

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற

Mar25

 நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார

Dec27

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர

Jul18

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்

Mar01

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்

Mar06

குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க

Mar05

பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்

Aug07

போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்

Mar06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா

Feb01

பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன

Feb20

அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ

Feb06

பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற

Sep25

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (16:44 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (16:44 pm )
Testing centres