அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்துறையினரின் திடீர் சோதனை நடவடிக்கை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், நேற்றும் இன்றும் காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் காவல்த்துறையினரினால் வழங்கப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்த்துறை அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து கல்முனை ,சம்மாந்துறை, சவளைக்கடை , காவல் நிலைய போக்குவரத்து காவல்த்துறையினரும் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது 117 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் கொரிய ச
கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மற