மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றும் நோக்கில் தொழில் முயற்சிக்கான உபகரண உதவிகள் செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செயலக சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், வெளிநாட்டு பணியக உத்தியோகத்தர் எஸ்.சயனொளி, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.புலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மீட்சி அமைப்பின் நிதி உதவி மூலம் பாரம்பரிய உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்த எட்டு (08) பெண்களுக்கு உணவு உற்பத்தி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தெரிவித்தார்.


ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
