மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளர்.
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் தான் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மறைந்த தலைவர் ஜெயலலிதா பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும். அவர் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயன் அடைந்தனர்.
ஜெயலலிதா சிறப்பான நிர்வாகியாகவும், இரக்க குணம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க ஜெயலலிதா அயராது பாடுபட்டார்.
இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா
திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட
தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந
