புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என குற்றம் சாட்ட முடியாது- திருநாவுக்கரசர்!
புதுச்சேரியில் ஆளும்கட்சி எம்எல்ஏக்களின் திடீர் ராஜினாமா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துள்ளது. எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி அரசு இழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ” புதுச்சேரியில் திமுகவை வளர்ப்பதற்காக ஜெகத்ரட்சகன் பேசியதை காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என குற்றம் சாட்ட முடியாது. உட்கட்சி பிரச்சினையை பயன்படுத்தி புதுச்சேரி அரசை பாஜக அரசு கவிழ்த்துள்ளது” என்றார்.
முன்னதாக புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், அண்மையில் புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமையும். 30 தொகுதிகளும் திமுக வெற்றிபெறும். இல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில் 15 இடங்களிலும், திமுக 9 தொகுதிகளில் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுகவின் தயவால் தான் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது என்றார்.
மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந
சென்னையில் அனைவருக்கும்
மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ
