பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக "B" அறிக்கையூடாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன. ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ARஅறிக்கையூடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, பொலிஸ் நிலையங்கள் "B" அறிக்கையூடாக பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலான குழுவிற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளன.
இது தொடர்பிலே சிரேஸ்ட சட்டவாளர் ரி.பரன்சோதி மற்றும், சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் ஆகியோரிடம் தொடர்புகொண்டுகேட்டபோது, ஏற்கனவே குறித்த பேரணிக்கு தடைகோரி பொலிஸ் நிலையங்களிலிருந்து AR அறிக்கையூடாக முல்லைத்தீவு நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றம் ஒன்று இடம்பெற்றதற்கான சந்தேகம் இருந்தால் AR அறிக்கையூடாக வழக்குத் தாக்கல் செய்யப்படும். அந்தவகையிலேயே குறித்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி நீதிமன்றால் உத்தரவொன்றும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
