உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. அலக்நந்தா மற்றும் தாவ்லி கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரிஷி கங்கை அணை உடைந்து, கரையோரம் உள்ள கிராமங்களிலும் வெள்ளம் பாய்ந்தது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 600 இராணுவ வீரர்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையின் மூன்று ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளன.
‘நிலைமையை மதிப்பிடுவதற்கு ஒரு குழு சம்பவ இடத்திலேயே உள்ளது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.’ என இந்தோ திபெத் எல்லை படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் பாண்டே கூறினார்.
இரண்டு மருத்துவ குழுக்கள் இந்த நடவடிக்கைகளில் சேர்ந்துள்ளன. ஒரு பொறியியல் பணிக்குழு ரிங்கி கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தொடர்ந்து அதிகாரிகளுடன் பேசி நிலைமை குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம
இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக
காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச
பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவ
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டச
கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண
இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண