ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 501Y.V2 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஸ்வெலி ம்கைஸின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் தடுப்பூசியை தென்னாபிரிக்கா பெற்றுக்கொண்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இதற்குப் பதிலாக, ஜோன்சன் & ஜோன்சன் (ஜே & ஜே) மற்றும் ஃபைசர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அடுத்துவரும் வாரங்களில் வழங்கப்படவுள்ளன.
அதேநேரத்தில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என தென்னாபிரிக்க நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த
இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாப
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு
