தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சில கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை தென் கொரியா தளர்த்தியுள்ளது.
இருப்பினும் 4 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு கட்டுப்பாடுகளை தென் கொரியா அறிவித்துள்ளது.
பெப்ரவரி 26 முதல் தடுப்பூசி திட்டத்தை தொடங்க தென் கொரியா திட்டமிட்டுள்ளது, அதன் விவரங்கள் அந்நாட்டு கொரோனா தடுப்பு நிறுவனத்தின் தலைவரால் அறிவிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், சியோல் மற்றும் அண்டை பகுதிகளில் தொற்று கொத்துகள் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அப்பகுதிகளுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இன்று திங்கட்கிழமை முதல் சியோல் பகுதியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக உணவகங்கள் மற்றும் கபேக்கள் ஆகியவற்றினை மூடுவதற்கான நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
மதுபான நிலையங்கள் மற்றும் இரவு விடுதிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை திரையரங்குகள், இணைய சேவை நிலையங்கள், பூங்காக்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 83 ஆயிரத்து 869 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 1,527 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவ
கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடு
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர
