இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் 3000 மையங்களில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்திருந்ததால் ஆரம்பக்கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கடந்த மாதம் 16ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடும் பணி நேற்று தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் முன்களப்பணியாளர்களுக்கு போடும் பணி முடிவடைந்து, மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,194 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 11,106 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 82,63,858 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்புகள் 1,55,642 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத
அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள
அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம
மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட
பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்
தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தா
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம
