இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் திணறிக் கொண்டிருந்த சூழலில், இந்தியா குறைந்த காலகட்டத்திலேயே ஒன்றுக்கு இரண்டாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நம் நாட்டு மக்களுக்கு செலுத்தப்படுவதோடு மட்டும் அல்லாமல், பிற நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், அன்று தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,08,92,746 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,55,550 ஆக அதிகரித்துள்ளதாகவும் 11,395 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால் 1,36,571 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று உயிரிழப்புகளும் பாதிப்பும் சற்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்
தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்
அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி
மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி
தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி.
மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப
ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச
