இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் திணறிக் கொண்டிருந்த சூழலில், இந்தியா குறைந்த காலகட்டத்திலேயே ஒன்றுக்கு இரண்டாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நம் நாட்டு மக்களுக்கு செலுத்தப்படுவதோடு மட்டும் அல்லாமல், பிற நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், அன்று தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,08,92,746 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,55,550 ஆக அதிகரித்துள்ளதாகவும் 11,395 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால் 1,36,571 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று உயிரிழப்புகளும் பாதிப்பும் சற்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ
ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. பட
புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக ச
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த
