பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை மிக வேகமாக பரவுக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா வைரஸ், தற்போதுவரை 50 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸால், நோயாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய வைரஸ், உலகம் முழுவதும் புதிய கொரோனா அலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நாள்தோறும் 800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேபோன்று கடந்த சில வாரங்களாக ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், வவுனியா மாவட்டம் ஒரு இடைநிலை ஆபத்துள்ள பகுதி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட
“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ
