வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனா அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னாரில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு மூன்றாக உயர்ந்துள்ளதுடன், வடக்கில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒருவர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா