பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வைரஸுக்கு எதிரான நமது தேசிய முயற்சியில் இது மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
ஒவ்வொரு தடுப்பூசியும் நம் அனைவரையும் சற்று பாதுகாப்பானதாக்குகிறது. அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்’ என கூறினார்.
நேர்மறையான பரிசோதனையின் 28 நாட்களுக்குள் பிரித்தானியாவில் மேலும் 1,322பேர் இறந்துள்ளனர், மேலும் 19,202 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது பிரித்தானியாவின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 109,335 ஆகவும், மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 3,871,825 ஆகவும் கொண்டு வருகிறது.
பெப்ரவரி 2ஆம் திகதி வரையிலான அரசாங்க தரவுகளின்படி, மொத்தம் 10,021,471 பேருக்கு முதல் டோஸ் மற்றும் 498,962 பேருக்கு இரண்டாவது டோஸ் அளவையும் பெற்றுள்ளனர்.
வாரத்தின் தொடக்கத்தில் இருந்து புள்ளிவிபரங்கள் 80 வயதிற்கு மேற்பட்ட 10பேரில் ஒன்பது பேரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்கள் முதல் அளவையும் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
பெப்ரவரி 15ஆம் திகதிக்குள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 15 மில்லியனுக்கு முதல் அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் தற்போது இலக்கு வைத்துள்ளது.
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
உக்ரைனின் தெற்குப் பகுதியான கெர்சன் நகரைக் கைப்பற்றி
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டா
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர
போலாந்தில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
