கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பயிற்சி போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
டென்னிஸ் வீரர்கள் ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு தனிமை முகாமில் 14 நாட்கள் தங்கியிருந்தனர். 14 நாட்களை நிறைவு செய்த பின்னர், வீரர்கள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஹோட்டலில் தனிமை முகாமில் இருந்த 520 டென்னிஸ் வீரர்கள் மற்றும் பணியாளர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தனிமை முகாமில் இருந்து வெளியே வரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பயிற்சி போட்டிகள் இரத்தாகியுள்ளன. எனினும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 8ஆம் திகதி மெல்பேர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன
