அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் நேற்று (05) மாலை கொழும்பில் காலமானார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று (05) கொழும்பு 07 ஜாவத்தை மையவாடியில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்றில் 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04ஆம் திகதி பிறந்த அவர். அக்கரைப்பற்று மெதடிஸ்ட் மிசன் மற்றும் ரோமன் கத்தோலிக்க கல்லூரி, மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லுாரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்தார்.
1959ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லுாரியில் நுழைந்த அவர், 1965இல் உயர் நீதிமன்ற சட்டத்தரணியானார். 1974இல் பதில் நீதிபதியானார். 1975ஆம் ஆண்டு முதல் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில், கிழக்கு மாகாண குடியியல் வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
1984/85 காலப் பகுதியில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தெரிவான இவருக்கு, அவரது சேவையை பாராட்டி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் 2015இல் கௌரவிக்கப்பட்டார்.
சுமார் 56 வருட காலம் கிழக்கின் அனைத்து நீதிமன்றுகளிலும், குடியியல் வழக்குகளில் ஆஜராகியிருந்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு மூன்று சகோதர, சகோதரிகள் உள்ளனர். இவரின் சகோதர்களில் ஒருவர் அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய முன்னாள் அதிபர் ஹாறூன் என்பதோடு, மர்ஹூம் இக்பால் ஆசிரியர், மர்ஹூம் றக்கீபா ஆசிரியை ஆகியோர் இவரது ஏனைய சகோதர சகோதிகளாவர்.
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
