திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் "விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான மேம்பாட்டை மேற்கொள்ளும் பொருட்டு இவ் வலயத்திற்குட்பட்ட ஏழு (07) பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் நேற்று (03) வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பணிமனை கேட்போர் கூடத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை தலா 50 ஆயிரம் ரூபா வீதம் ஏழு பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது
இதில் முறைசாரா கல்வி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ் கே பிரபாகரன் ஆசிரிய ஆலோசகர் கே அகிலன் உட்பட பலரும் கலந்து கொண்டு இவ் உபகரணங்களை வழங்கி வைத்தனர். இதன் போது கரம் போர்ட், பேட்மிட்டன் , உதைபந்து, பிரிஸ்டல் வோ
கிரிக்கெட் விளையாட்டுக்கான பந்து, வெட் மட்டைகள் மற்றும் மெத்தை, சித்திரங்கள் வரைவதற்கான உப காரணங்கள் என பல்வேறு விளையாட்டு உபகரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இப் பொருட்களை இவ் வலயத்தில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்கள கல்வி கற்கும் பாடசாலைகளான தி- வெள்ளை மணல் அல் அஹ்ஸர் வித்தியாலயம், தி- மாதுமை அம்பாள் வித்தியாலயம்,
தி-புல்மோட்டை அறபாத் வித்தியாலயம், தி- சண்முகா இந்து மகளிர் கல்லூரி, தி-கலைமகள் மகா வித்தியாலயம், தி- இராஜகிரிய வித்லோக வித்தியாலயம், தி-.விக்னேஸ்வர மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இவ் உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப
இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கில
ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
