கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் ஒன்றிணைந்து பாடுபட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னும் உறுதிபூண்டுள்னர்.
இருவரும் தொலைபேசியில் உரையாடிய பின்னர், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,
‘இப்போதுதான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஒரு பெரிய உரையாடலை நடத்தினேன். கொரோனாவின் உலகளாவிய சவால்களுக்கு, பருவநிலை மாற்ற பிரச்சினைகளுக்கு, பொருளாதார பின்னடைவுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் புதிய ஆட்சியை வரவேற்றேன்.
தென்கொரியா, அமெரிக்கா கூட்டணியை மேலும் மேம்படுத்தவும் நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் நாங்கள் ஒன்றிணைந்து பாடுபடுவோம்’ என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு பிறகாவது கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகின்றது.
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
உக்ரைனின் தெற்குப் பகுதியான கெர்சன் நகரைக் கைப்பற்றி
ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ
