நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி விபத்துக்களினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் ஏழு வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ள நிலையில் அதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களில் இறந்தவர்களில் 5 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும் மேலும் நான்கு பேர் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை மிக மோசமானதும் கவலைக்குரியதும் என தெரிவித்துள்ள அவர் வீதி விபத்துக்கள் மூலம் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோர் தொகை அதிகரித்து வருகின்றதுஎன்றும் தெரிவித்துள்ளார். எல்லை மீறிய வேகமும் வீதி சமிக்ஞைகளை அலட்சியப்படுத்துவது மே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏக்கல விமானப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை 6. 45 மணியளவில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 & 11 ஆகிய பகுதிகளில் நாளை குறைந்த அழு
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
