யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணியில்லாத மக்களை துரிதமாக மீள குடியமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு 7 இலட்சம் ரூபாய் செலவில் தலா 20 பேர்ச் காணியை வழங்க ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்களது பிறப்பிடத்தை அண்மித்த பகுதியில் காணிகளை வழங்குமாறு இந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் தற்போதைய பெறுமதிக்கு அமைய குறித்த பிரதேசத்தில் 7 இலட்சம் ரூபாய்க்கு 20 பேர்ச் காணியை கொள்வனவு செய்ய முடியாதென்பது தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட அதே தொகைக்கு அரச விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கு அமைய 10 தொடக்கம் 20 பேர்ச்சஸ் வரையிலான காணியை தனியார் உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறிமுறையை தயாரித்து மக்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் கிளிநொச்சி கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங் ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சி அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று