அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ் புளொயிட்(George Floyd) என்பவர் அந் நாட்டுப் பொலிஸ் அதிகாரியொருவரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் இனப்பாகுபாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறித்ததே.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது அமெரிக்க வெள்ளை இன பொலிஸார் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அண்மையில் ரோச்சஸ்டர் (Rochester) மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர்.
அப்போது சிறுமி கட்டுக்கடங்காமல் எதிர்த்து பொலிஸாரைத் தாக்கியதால் அவரைக் கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில் அடித்துள்ளதோடு கைவிலங்கிட்டுள்ளனர்
இச் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கைது செய்த வெள்ளையின காவலரான அன்ரே அண்டர்சன் (Andre Anderson) மீது விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் இச் சம்பவத்தையடுத்து நேற்றைய தினம் குறித்த அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் இதுதொடர்பாக குறித்த அதிகாரி கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தங்களைத் தாக்கியதால் அவரை பத்திரமாக அழைத்துச்செல்ல பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகவும், கறுப்பின சிறுமி என்று பாகுபாட்டை நாங்கள் பார்க்கவில்லை, அவளை வலுக்கட்டயாக அவளை தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல
டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம
சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால
Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது.
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
திபெத் நாட்டுக்கு சீனா உரிமை கோருவது மட்டுமின்றி, அதை
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
