இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடிக்கைக்கு மாநிலங்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீனவர்கள் பிரச்சினையை எழுப்பினர்.
தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டினார். இலங்கை கடற்படையால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிடுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்தே வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.
தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட
மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங
கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோ
மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அ
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற
சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப
கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது
வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக்
