இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடிக்கைக்கு மாநிலங்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீனவர்கள் பிரச்சினையை எழுப்பினர்.
தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டினார். இலங்கை கடற்படையால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிடுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்தே வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில்
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட முதல்-மந்திரி
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தன நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை
