பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்தார். மதுரையில் அவர் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 கூட்டங்களில் பங்கேற்றார்.
தனி விமானத்தில் மதுரை வந்த நட்டா, தனியார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கியவர், மறுநாள் காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வணங்கினார். மதுரை ரிங் ரோடு வாஜ்பாய் திடலில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இடையில் நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இதுகுறித்து நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’ஒரே நாளில் 10 பேக் டு பேக் கூட்டங்களில் பங்கேற்று கட்சி தொண்டர்களையும், மதுரை மக்களையும் ஊக்குவித்திருக்கிறார் தலைவர் ஜெ.பி.நட்டா. அவரின் வருகை சிறைந்த உத்வேகத்தினை தந்திருக்கிறது.
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்..அதனால்தான் அவர் எங்களுக்கு தலைவராக கிடைத்திருக்கிறார்’’என்று தெரிவித்திருக்கும் அவர், ‘’உங்கள் கடின உழைபுக்கு என் நன்றி ஜி’’என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல
பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட
உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
