வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்பதால் தான் அவர் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர். சட்டப் போராட்டம் தொடரும். அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று கூறினார்.
கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சசிகலா சிறைக்கு சென்றவுடனே கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக கொடியை அவர் பயன்படுத்த உரிமையில்லை என போர்க்கொடியை உயர்த்தினர்.
இந்த நிலையில் தான், அதிமுக கொடியை பயன்படுத்த எல்லா உரிமையும் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததிற்கே இவ்வளவு பிரச்னை என்றால், தமிழகம் வந்தால் அரசியல் களத்தில் ‘ஒரு சம்பவமே காத்திருக்கு’ என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வ
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி
ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்ப
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு
ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ