மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் சுகாதார துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.
முதலாவது கொவிட்-19 தடுப்பூசியை மன்னார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.கே.வின்சனுக்கு செலுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோருக்கு செலுத்தியுள்ளனர். பின்னர் சுகாதார துறையிருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதேவேளை மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் 2ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள், 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தி
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
