More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!
Jan 30
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:



கர்நாடகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 17-ந் தேதி நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதால், போலியோ சொட்டு மருந்து வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 64 லட்சத்து 7 ஆயிரத்து 930 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தனது அலுவலக இல்லத்தில் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளும், இப்போது போலியோ சொட்டு மருந்தை பெற வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவது இல்லை. கர்நாடகத்தில் 11 ஆண்டுகளாக புதிதாக போலியோ பாதிப்புகள் ஏற்படவில்லை.



போலியோ இல்லாத நாடாக இந்தியா ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். 85 லட்சத்து 5 ஆயிரத்து 60 டோஸ் சொட்டு மருந்துகள் தயாராக உள்ளன. இந்த பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 179 மருத்துவ ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.



6, 645 மேற்பார்வையாளர்கள், 904 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 32 ஆயிரத்து 908 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் தவறான தகவல்களை மக்கள் நம்பக்கூடாது. சிலருக்கு லேசான பக்க விளைவுகள் இருந்தன. ஆனால் அதுவும் சரியாகிவிட்டது.



இந்த தடுப்பூசியை நாம் பயன்படுத்தாவிட்டால், நமக்கு மிகப்பெரிய இழப்பு. கர்நாடகத்தில் பள்ளிகளை திறக்க அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வித்துறை இணைந்து இந்த விஷயத்தில் செயல்பட்டு வருகிறது.



இவ்வாறு சுதாகர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul13

நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன

Jun14

மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத

Aug18

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை

Jul08

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத

Sep30

ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி

Dec30

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட

Jan02

உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை

May09

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள

Apr17

சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

Jun24

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட

Sep19

மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகா

Mar07

அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்

Jun15

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி

Feb22

 நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ

Jan29

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (00:29 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (00:29 am )
Testing centres