ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே, அவசர நிலையை மீறி இவர்கள் இரவு விடுதிக்குச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இதனை விசாரித்த பிரதமர் யோஷிஹிடே சுகா, அமைச்சரவையிலிருந்து டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்கினார்.
ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் (எல்டிபி) சேர்ந்த டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியிலிருந்து விலகினர்.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் இளைய கூட்டணி பங்காளியான கோமிட்டோவின் முன்னாள் செயல் பொதுச் செயலாளர் கியோஹிகோ டோயாமா, ஜனவரி மாதம் 22ஆம் திகதி, டோக்கியோவின் கின்சா மாவட்டத்தில் இரவு விடுதிக்குச் சென்றதை ஒப்புக்கொண்டதையடுத்து அவரே முன்வந்து தனது பதவியை இராஜினாமா செய்தார்.
ஜப்பானில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடவும், விடுதிகள், மதுபான விடுதிகளுக்குச் செல்வதை தவிர்க்கவும், உணவகங்களை முன்கூட்டியே மூடவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த
உலகம் முழுவதும்
சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்ல அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கு உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத் மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக் உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.
