விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராடி வந்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர்.
இதன்போது விவசாயிகளில் ஒரு பிரிவினர் பொலிஸார் அனுமதி அளித்த நேரத்துக்கு முன்னரே, அனுமதிக்காத வீதிகளின் வழியாக பேரணியை நடத்தினர்.
இதனால் பல இடங்களில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் பொலிஸாரின் எதிர்ப்பை மீறியும் கான்கிரீட், இரும்பு தடுப்பு வேலிகளை டிராக்டர்கள் மூலம் உடைத்துக்கொண்டு அவர்கள் முன்னேறினர்.
பொலிஸாரின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால் பொலிஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய டெல்லி பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸ் அதிகாரி ஈஷ் சிங்கால் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா
அதிமுக ம
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள
