புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரேஸில் அரசு தடை விதித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேஸில் 3 ஆவது இடத்திலுள்ளது.
மேலும் பிரேசிலில் 88 லட்சம் பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந் நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டதோடு இத் தொற்று 70 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால், பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகளும் உடனடியாக தற்காலிகமாக நிறுத்திவைத்தன.
எனினும், புதிய வகை கொரோனா 12-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. அதேபோல், தென் ஆபிரிக்காவிலும் மற்றொரு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து தென் ஆபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரேஸில் அரசு தடை விதித்துள்ளதோடு பிரித்தானிய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் பிரேஸில் நீட்டித்துள்ளது.
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இய
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில
ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதிய
போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்
அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
