இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 இலட்சம் தடுப்பூசிகள் (டொஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் எயார் இந்தியா விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பித்ததன் பின்னர், முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கக்கூடியதாக இருக்கும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கிடைக்கவிருக்கும் தடுப்பூசி கிடைத்த பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு மணித்தியாலத்தில் 15 தொடக்கம் 20 பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் மூலம் இது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின