அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயற்திறனுடன் போராடுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் பரவும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயற்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காமல் செயற்படுகிறது. தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தது.
ஆனால் தடுப்பூசியின் இரண்டாவது டோசின் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். இதனால் தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள் செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு பரவிய வைரசை விட உருமாறிய கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என்றும், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்
பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை
இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீர
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கு
ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த
