2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரப்பட்டுள்ளது.
அபிவிருத்தித் திட்டங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கமைய அவர்கள் தமது முன்மொழிகளைச் சமர்ப்பிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
வல்வட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கில
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் ச
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
