எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவத்கு ரஷ்ய ஜனாதிபதி தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் பல மாதங்களாக சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்ட நவல்னிக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன் மொஸ்கோவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களில் இவ்வார இறுதியில் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை அமெரிக்கா கண்டித்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தது.
இந்த சூழலில், உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) க
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு
மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
