விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன.
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கெட்டில் விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், முறியடித்துள்ளது.
வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த ரொக்கெட், புவி வட்டப்பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியதும், முதல்கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பியது. அது அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்ட மிதவையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதேசமயம், ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இதில், அரசாங்கம் தொடர்பான மற்றும் வணிகரீதியானவை 133 செயற்கைக் கோள்கள் ஆகும். 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ்எக்சின் ஸ்டார்லிங் செயற்கைக் கோள்கள் ஆகும்.
12 ஆயிரம் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் செய்மதி இணையசேவையை வழங்கும் ஸ்டார்லிங் திட்டத்தில் ஏற்கனவே 1015 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் அனுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந
சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வர
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய
ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை வ
கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக ந
தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ
