விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன.
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கெட்டில் விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், முறியடித்துள்ளது.
வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த ரொக்கெட், புவி வட்டப்பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியதும், முதல்கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பியது. அது அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்ட மிதவையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதேசமயம், ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இதில், அரசாங்கம் தொடர்பான மற்றும் வணிகரீதியானவை 133 செயற்கைக் கோள்கள் ஆகும். 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ்எக்சின் ஸ்டார்லிங் செயற்கைக் கோள்கள் ஆகும்.
12 ஆயிரம் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் செய்மதி இணையசேவையை வழங்கும் ஸ்டார்லிங் திட்டத்தில் ஏற்கனவே 1015 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் அனுப்பியுள்ளது.
ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இ
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய
உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தே
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டொலருக்கு வாங்குவதாக ஒப்
இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
