அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற லைபீரியக் கப்பலான எம்.வி.யுரோசன், திருகோணமலைத் துறைமுகத்தை அண்மித்து விபத்துக்குள்ளானது.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதி சிக்குண்டுடிருந்த குறித்த கப்பலை இலங்கைக் கடற்படை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மீட்டுள்ளது.
கப்பலில் சீமெந்து உற்பத்திக்குப் பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் தொன்னும், 720 மெற்றிக் தொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக் கப்பல், கடந்த ஜனவரி எட்டாம் திகதி அபுதாபியில் இருந்து சீமெந்துக்கான திரவ பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கிப் பயணமாகியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பகல் சின்ன இராவணா கோட்டைக் கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியதுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டதை அடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று பிற்பகல் வேளையில் இலங்கைக் கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்தியுள்ளனர். இந்நிலையில், கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
