நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.
முதலாவது அலையை முடக்க கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடிந்தது என குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தையும் நாட்டையும் தொடர்ச்சியாக நிறுத்திவைக்க முடியாது என ஜனாதிபதி கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால், சுற்றுலாத்துறையினால் கிடைக்கும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை நாடு இழந்தது என்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சுட்டிக்காட்டினார்.
தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் அன்றிலிருந்து அத்துறை மீளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கடன் சுமையில் இருந்தபோது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்றும் இருப்பினும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வட்டி விகிதத்தைக் குறைக்கவும் தங்களால் முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்ட
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உ
பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத
சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3
போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும
