எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவத்கு ரஷ்ய ஜனாதிபதி தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் பல மாதங்களாக சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்ட நவல்னிக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன் மொஸ்கோவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களில் இவ்வார இறுதியில் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை அமெரிக்கா கண்டித்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தது.
இந்த சூழலில், உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர
இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய
சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல்
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய
