புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி, கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும் கையிலும் கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாகண்டல் பகுதியிலுள்ள தனது வயலை பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டு திரும்பியபோது, நடந்துவரும் பாதையின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து கரடி தாக்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நண்பரின் உதவியுடன் வயல்பகுதியில் இருந்து வெளியேறி, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போது மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அவரை மாற்றியுள்ளனர்.
அண்மையில் பெய்த மழையினால் காட்டில் வெள்ளநிலை வற்றாத நிலை காணப்படுகின்ற நிலையில் காட்டிலுள்ள யானை, கரடிகள் மேட்டு நிலங்கள் நோக்கி வந்து மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ
கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் க
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை
