பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது.
இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் இருபத்தி மூன்றாவது சந்திப்பை நேற்று காணொளி காட்சி வாயிலாக நடத்தின.
இந்த சந்திப்பின்போதே இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதனை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ற வகையில் மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஏற்பாடுகளை மீளாய்விற்கு உட்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இலக்காகக் கொண்ட கொவிட் 19 தொற்றுநோயைக் கையாள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் டொலர் மானியம் வழங்கியதற்கு இலங்கை இதன்போது நன்றி தெரிவித்தது.
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வை
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
