பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது.
இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் இருபத்தி மூன்றாவது சந்திப்பை நேற்று காணொளி காட்சி வாயிலாக நடத்தின.
இந்த சந்திப்பின்போதே இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதனை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ற வகையில் மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஏற்பாடுகளை மீளாய்விற்கு உட்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இலக்காகக் கொண்ட கொவிட் 19 தொற்றுநோயைக் கையாள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் டொலர் மானியம் வழங்கியதற்கு இலங்கை இதன்போது நன்றி தெரிவித்தது.
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம்