திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி வீதியில், மட்டிக்களி பகுதியில் வீதியோர மீன் வியாபாரிகளது உடமைகளை நகர சபையினர் கையகப்படுத்தி, அப்பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வியாபாரிகளிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை நகர சபையால் நிதி வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், திடீரென நகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கையின் காரணமாக தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் அன்றாடம் நடமாடும் பகுதிகளில் குறித்த வியாபாரத்தினை முன்னெடுத்தால் மாத்திரமே போதிய அளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியுமெனவும் நகர சபையினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் வியாபாரத்தை முன்னெடுத்தால் தமக்கு நஷ்டம் ஏற்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமது பிரச்சினைக்குத் தகுந்த முடிவினைப் பெற்றுத்தருமாறு வீதியோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்தி
தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு
இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
