More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னார் மாவட்டத்தில் 100இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்:
மன்னார் மாவட்டத்தில் 100இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்:
Jan 23
மன்னார் மாவட்டத்தில் 100இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்:

இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் தொற்று நிலை அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இவர், கடந்த வாரம் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் விடுதி இலக்கம் இரண்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். குறிம்ம விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டமையினால் இவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



எனினும், பி.சி.ஆர். பரிசோதனையின்போது தொற்று இல்லையென முடிவு வந்ததுடன் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.



இந்நிலையில், இவருக்கு நேற்று முன்தினம் இரவு சடுதியாக நோய் நிலை அதிகரித்தது, மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார்.



உயிரிழந்த பின்னர் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார் மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் இரண்டாக உயர்ந்துள்ளன.



அத்துடன், இம்மாதம் தொடக்கத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 849 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மொத்தமாக ஏழாயிரத்து 649 பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.



இந்நிலையில், தற்போது ஒவ்வொரு நூறு பி.சி.ஆர். பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற போது 3.9 வீத கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். இது, மன்னார் மாவட்டத்தில் தொற்று பரவலின் நிலை அதிகரித்துக் காணப்படுவதை எடுத்துக் காட்டுகின்றது.



எனவே, மக்கள் அவதானத்தோடும் பொறுப்போடும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும்” என வைத்தியர் வினோதன் அறிவுறுத்தியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr17

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப

Aug18

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது

Jul22

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக

Sep21

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர

May27

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ

Feb06

கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்

Feb05

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி

Feb07

2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம

Feb23

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்

Apr30

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறு

May03

இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும்

Jun14

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆர

Apr11

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தி

Jun21

நுவரெலியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5

Feb02

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (09:02 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (09:02 am )
Testing centres