எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் விவசாய நிலம் ஒன்றில் பாதியளவில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய எத்கந்துர பிரதேசத்தில் வசிக்கும் சந்த குமார சரத்குமார என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறித்த இளைஞன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த இளைஞனின் நெருங்கிய நண்பன் என கூறப்படும் 40 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இளைஞனின் உடல் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் அவரது பணப்பையையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர
தொலைபேசி நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் தொலைபேசி கட
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்த
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
