கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக மாவட்டத்தில் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் 12 மணிக்கு பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளிலே குறித்த அனர்த்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி கிளிநொச்சியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து வீதியில் விழுந்துள்ளது.
கிளிநொச்சி நகர் மற்றும் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கண்டாவளை பகுதியில் வாழைத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த அனர்த்த பாதிப்புக்களின் மதிப்பீடுகள் தேசிய அனர்த்த சேவைகள் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்
அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோச
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
