கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக மாவட்டத்தில் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் 12 மணிக்கு பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளிலே குறித்த அனர்த்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி கிளிநொச்சியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து வீதியில் விழுந்துள்ளது.
கிளிநொச்சி நகர் மற்றும் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கண்டாவளை பகுதியில் வாழைத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த அனர்த்த பாதிப்புக்களின் மதிப்பீடுகள் தேசிய அனர்த்த சேவைகள் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சே பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69 நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற் கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த