இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்றச்சாட்டுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பு ஒன்றில் பிரதானியாக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்த கண்டி வீசா மையத்தின் இணையத்தளத்தில் இரகசியமாக நுழைந்து இந்த மோசடியை செய்துள்ளார்.
சந்தேகநபர், பாரியளவிலான மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்ஃபோனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் மூலோபாய நிபுணர் ஒருவர் சந்தேக நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வீசாவைப் பெறுவதாக கூறி அவரிடம் சிறிது நேரம் உரையாடி அனைத்து தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த நபர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் குறி்த்த சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கண்டி வத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள சந்தேகநபர் வருவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்தள்ளனர்.
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
