எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவை பெற்றுக்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது.
மேலும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடையூறு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு பெற்றோலிய தொழிற்சங்கங்கள் பணகப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினால் பல எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
கொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் நேற்று
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ
இந்த வார நாடாளுமன்ற அமர்வு, இன்றும், நாளையும் என இரு தி
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
