கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், கண்டி பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பெண்கள் விடுதிக்குள் இரகசியமாக ஐந்து மாணவர்கள் நுழைந்ததாகவும் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் போதே மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாணவிகளின் சம்மதத்துடனேயே மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதாகவும் அவர்களின் தலைமுடி கூட வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதி காப்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மார்ச் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்
வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய ப
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ
யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம
